
பிரபல சினிமா தமிழ் நடிகையும் ஸ்டார் விஜய் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றவருமான நடிகை கஸ்தூரி, கொலை வழக்கை விசாரிக்கும் பெண் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். செளத் இந்தியா புரொடக்ஷன்ஸ்(South India Productions) என்ற சினிமா நிறுவனம் தயாரித்துள்ள படம் இ.பி.கோ 302(EP.CO.312) இந்த படத்தில் கஸ்தூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

காதலர்களாக நாகசக்தி, வர்ஷிதா ஆகியோர் இந்த படத்தில் அறிமுகமாகிறார்கள், கொலை வழக்கை துப்பறியும் கஸ்தூரிக்கு துணைபுரியும் கவலதிகரிகளாக வின்ஸ்குமார், வையாபுரி மற்றும் ராபின் பிரபு,போண்டாமணி ஆகியோர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கி இருக்கிறார் சலங்கைதுரை.

இ.பி.கோ 302 படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி நடிகை கஸ்தூரி பேசும்போது, இந்த படத்தில் இப்படியொரு கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குனர் சலங்கைத்துரை அவர்களுக்கு முதல் நன்றி. தமிழில் நான் ஒரு காவல் அதிகாரியாக நடிக்கும் முதல் படம் இது. இந்தப்படம் வழக்கமான காவல் அதிகாரிகள் கதையைபோல் இருக்காது. நிச்சயம் இது ஒரு மாறுபட்ட அனுபவத்தைக் கொடுக்கும்.

பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகளை எதிர்த்து ஸ்த்திரமான குரலை எழுப்பும் படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம். இப்படத்தை மக்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும். ஏன் என்றால் இது இன்றைய சமூகத்திற்கு தேவையான அறம் சார்ந்த படம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை. குறிப்பாக காதலர்கள் அனைவரும் இப்படத்தைப் பார்க்கவேண்டும். எது காதல் என்பதை இந்தப்படம் பேசியுள்ளது என்று கூறியுள்ளார். வருகிற 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று இந்த படம் வெளியாக உள்ளது.