
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சத்தார்பூரில் பத்தாயிரம் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் ஒன்று ஆளுனர் அனில் பைஜால் முன்னிலையில் இந்த மாத ஆரம்பத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த மையத்தில் கொரோனா வைரஸ் பாதித்த 14 வயது இளம்பெண் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், குளியலறைக்கு சென்ற அந்தபெண்ணை அங்கு சிகிச்சையிலிருந்த கொரோனா பாதித்த மற்றொரு நோயாளி பலவந்தமாக கற்பழித்து உள்ளார். அந்த பெண் மற்றும் அந்த குற்றவாளி இருவரும் குடிசை பகுதியில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் இரண்டு பேரும் தங்களது உறவினர்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். சம்பவம் பற்றி அந்தபெண் தனது உறவினரிடம் கூறி உள்ளார்.

இதனை தொடர்ந்து, 19 வயதுடைய அந்த குற்றவாளியையும், அவனது நண்பரையும் காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகார் நகரில் தீன்தயாள் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பெற்ற பெண் நோயாளி ஒருவரை அஙுகு பணியாற்றிய டாக்டர் ஒருவர் கற்பழித்த அதிர்ச்சி சம்பவம் நேற்று நடந்தது. அந்த பரபரப்பு முடிவதற்குள் கொரோனா பாதித்த இளம்பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்ட மற்றும் ஒரு சம்பவம் இந்தியாவில் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.